முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெகிழி இல்லா தமிழகம் படைக்க திருச்சியில் ஒன்றுகூடிய சமூக ஆர்வலர்கள்

Plastic tamilnadu Banplastic

மனிதன் கண்டுபிடித்த பொருட்களில் இந்த பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களில் ஒன்று நெகிழி

இயந்திர வாழ்க்கையில் சுலபமாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கொண்டதன் காரணமாக இன்று ஒரு முறை உபயோகப்படுத்தும் நெகிழி பயன்பாடு பெருகி நம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் எல்லாமே கேள்விகுறியாகி இருக்கின்றன

இந்த நிலை நீடித்தால் நம் அடுத்த தலைமுறை பிள்ளைகள் இந்த மண்ணில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவே நாம் முடிந்தவரை இந்த நெகிழி பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் அதற்கான ஒரு தொடக்கம் தான்  இந்த நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு

Plastic tamilnadu 2019

இந்த மாநாடு திருச்சி தேசிய கல்லூரியில் ஜுலை 14 2019 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது

இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்புகள்,  தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்






அவற்றில் புதிய பயணம் , சேலம் இளைஞர்கள் குழு , பணை காக்கும் நண்பர்கள் திருப்பூர் , நெகிழி இல்லா திருப்பூர் , கிராமிய மக்கள் இயக்கம் , பசுமை கரூர் , பசுமை சங்ககிரி , பசுமை இந்தியா , டார்கெட் ஜீரோ நிறுவனர் பாலகுமாரன் மற்றும் மரம் பழனிச்சாமி , பசுமை ஹாஜி போன்ற ஏராளமானோர் பங்குபெற்றனர்



நிகழ்வில் இயற்கை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது அதில் மரங்களினால் ஆன விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் , இயற்கை மருத்துவ பொருட்கள் , வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கும் முறை , இயற்கை நாப்கின் , எளிதில் மண்ணில் மற்றும் நீரில் மட்கும் தன்மை கொண்ட நெகிழி இல்லா பைகள் , இயற்கை உரங்கள் , இயற்கை உணவுப்பொருட்கள் , பாரம்பரிய விதைகள் , மண்பாண்ட சமையல் பொருட்கள் , நம்மாழ்வாரின் புத்தகங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது இதனை ஏராளமானோர் கண்டு ரசித்ததுடன் தங்களுக்கு தேவையானதை வாங்கி சென்றனர்


மேலும் நெகிழியினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது இதனை அனைவரும் புகைப்படம் எடுத்து சென்றனர்

நிகழ்வில் பல சமூக ஆர்வலர்கள் உரையாற்றினார்கள்  , சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது மேலும் பாரம்பரிய நடனம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

இந்த நிகழ்ச்சியை கிரீன் பேஜஸ் நிறுவனர் சந்தானம் ராமசாமி , சைன் திருச்சி அமைப்பின் நிறுவனர் மனோஜ் தர்மா , புதிய பயணம் அமைப்பு நிறுவனர் இராகவன் சிவராமன் , பெருவை புகழேந்தி , கௌரிஷ் ஜெயபால் , நல்லப்பன் தங்கராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள் மேலும் இவர்களுடன் இணைந்து திருச்சி தேசிய கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்நிகழ்வு வெற்றிகறமாக நடைபெற உதவி புரிந்தனர்

மாநாட்டிற்கு வரும் நபர்களை தனது ஆட்டோ மூலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய கல்லூரி வரை இலவசமாக அழைத்து சென்ற தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த
திரு சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து சமூக
செயற்பாட்டாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

பசுமை கரூர் 2019

வாருங்கள் நெகிழி இல்லா மற்றும் பசுமை தமிழகம் படைப்போம்

மாற்றம் நம்மிடமிருந்து💪💪💪

 அன்புடன்
 ஜெகன்
🌱பசுமை கரூர்🌱

கருத்துகள்

  1. நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் நெகிழிப்பைகளின் அபாயகரமான தாக்குதல்களளுக்கான காரணிகள் தெளிவாக விளக்கப் பட்டது இனி ஒவ்வொரு தனி மனிதனும் நெகிழியை தவிர்க்க எல்லாவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டு நம் பிறவா தலைமுறைகள் உயிருடனும் நோய்நொடி இன்றியும் நல்ல தூய காற்றகாற்றை பெறவும் நல்ல மழை வளம் சுகாதாரமான குடிநீர் பெறவும் ஒவ்வொருவரும் நெகிழிப்பைகளை தவிர்த்து துணி பை கையிலெடுக்க தீவிர முயற்சி எடுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

20 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கரூர் ஆத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறை கழிவுநீர் | துர்நாற்றம் வீசும் அவலம்

    உலகில் கிடைக்கும் மிகவும் சுவையான குடிநீரில் ஒன்று தான் சிறுவாணி நீர் , அப்படிப்பட்ட சுவையான நீர் கரூர் மாவட்டம் வரைக்கும் வந்தாலும் நாம் அந்த சுவையை சுவைக்க முடியாது. காரணம் என்ன ? பார்ப்போம்   மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் இணைந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது , இந்த ஆற்றின் பெயர் பெரியாறு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஆற்றுடன் வெள்ளியங்கிரி மலையில் இருந்து உருவாகும் மத்திமர கண்டி ஓடையும் பின்பு சின்னாறு , தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் ஒன்று சேர்ந்தவுடன் இவை நொய்யல் என பெயர் பெருகிறது.   பின்பு கோவை , திருப்பூர் , காங்கேயம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.   ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும் , விவசாயம் வளமாக அமைய காரணமாகவும் இருந்த நொய்யல் ஆறு தற்போது விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் , நிலத்தடி நீர்மட்டத்தை கெடுத்தும் வருகிறது அதற்கு முக்கிய காரணம் திருப்பூர் பகுதியில் இருந்து நேரடியாக ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.   இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த

5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா! - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

கரூரில் மண்டல துணை வட்டாட்சியர் ஒருவர், தனது இருக்கைக்குப் பின்னே, 'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது விலை பேசாதீர் '  என்று எழுதி வைத்துள்ளது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது. `எந்தச் சூழலிலும் லஞ்சத்தை விரும்பமாட்டேன்' என்று நேர்மை மாறாமல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஓர் அரசு அலுவலர்தான், மோகன்ராஜ். கரூர் மண்டல துணை தாசில்தாராக இருக்கும் இவர், தனது அறை முழுக்க, `என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர். கையூட்டு கொடுப்பதும், கொள்வதும் குற்றமாகும். மண்டல துணை வட்டாட்சியர், கரூர்' என்று எழுதிவைத்து அசத்துகிறார். அதோடு, `பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக '5' மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்' என்றும் எழுதி வைத்து அசரடிக்கிறார். நான் பணிஓய்வு அடையும்வரை மரக்கன்று வளர்க்க நான் செய்யும் முயற்சியையும், நான் செய்யும் பணியில் கட்டிக்காக்கும் நேர்மையையும் விடாமல் தொடருவேன். இதேபோல்

தமிழக நீர் ஆர்வலர்கள் செயல் திட்ட பயிற்சி முகாம் | புகைப்பட தொகுப்பு

தமிழக நீர் ஆர்வலர்கள் செயல் திட்ட பயிற்சி முகாம் | 22/02/2020 | புகைப்பட தொகுப்பு. இடம் : இராமகிருஷ்ண தபோவனம் , திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி