"பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 5 மரக்கன்றுகள் இலவசம்" - இளையதலைமுறையின் அசத்தல் அறிவிப்பு!
கரூரில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக 5 மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் விண்ணப்பம் முதுநிலை வரிசையின் படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும் என்று சமீபத்தில் கரூர் மண்டல துணை வட்டாட்சியர் திரு மோகன்ராஜ் அவர்கள் அறிவித்திருந்தார் அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கரூரை பசுமையாய் மாற்றும் பொருட்டு "பசுமை கரூர்" என்ற திட்டத்தினை செயல்படுத்தி வரும் இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பானது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பசுமை கரூர் திட்டத்தின் மூலம் 5 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. தொடர்புக்கு இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு கரூர் 9444738877 9787038867