முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

20 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கரூர் ஆத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறை கழிவுநீர் | துர்நாற்றம் வீசும் அவலம்

    உலகில் கிடைக்கும் மிகவும் சுவையான குடிநீரில் ஒன்று தான் சிறுவாணி நீர் , அப்படிப்பட்ட சுவையான நீர் கரூர் மாவட்டம் வரைக்கும் வந்தாலும் நாம் அந்த சுவையை சுவைக்க முடியாது. காரணம் என்ன ? பார்ப்போம்   மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் இணைந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது , இந்த ஆற்றின் பெயர் பெரியாறு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஆற்றுடன் வெள்ளியங்கிரி மலையில் இருந்து உருவாகும் மத்திமர கண்டி ஓடையும் பின்பு சின்னாறு , தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் ஒன்று சேர்ந்தவுடன் இவை நொய்யல் என பெயர் பெருகிறது.   பின்பு கோவை , திருப்பூர் , காங்கேயம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.   ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும் , விவசாயம் வளமாக அமைய காரணமாகவும் இருந்த நொய்யல் ஆறு தற்போது விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் , நிலத்தடி நீர்மட்டத்தை கெடுத்தும் வருகிறது அதற்கு முக்கிய காரணம் திருப்பூர் பகுதியில் இருந்து நேரடியாக ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.   இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த

பற்றி எறியும் உலகின் நுரையீரல்.. பாதுகாக்க வலியுறுத்தும் தமிழர்கள்

உலகில் எங்கு அநீதி நேர்ந்தாலும் முதலில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பது தமிழினமாக தான் இருக்கும் அந்த வகையில் இன்று உலகிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு நடந்து வருகிறது அதுதான் அமேசான் மழைக்காடுகள் அழிப்பு.. பூமியில் உற்பத்தியாகும் மொத்த ஆக்ஸிஜன் அளவில் 20 விழுக்காடு அளவு அமேசான் காடுகளில் இருந்து தான் உற்பத்தி ஆகிறது எனவே தான் அதனை உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது கடந்த மூன்று வார காலமாக இந்த நுரையீரல் தீ பற்றி எறிந்து கொண்டு உள்ளது.. பல அரியவகை உயிரினங்கள் , தாவரங்கள் எல்லாம் அழிந்து கொண்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9500 காட்டு தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 80 விழுக்காடு அளவு அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜுலை மாதம் மட்டும் சுமார் 1345 ச.கி.மீ அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது , இதன் அளவை ஒப்பிட்டு பார்த்தால் டோக்கியோ நகரை விட இரண்டு மடங்கு பெரியது. இதன் ஆபத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் உடனடியாக தீயை அனைக்க வேண்டும் என்றும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும்

நெகிழி இல்லா தமிழகம் படைக்க திருச்சியில் ஒன்றுகூடிய சமூக ஆர்வலர்கள்

மனிதன் கண்டுபிடித்த பொருட்களில் இந்த பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களில் ஒன்று நெகிழி இயந்திர வாழ்க்கையில் சுலபமாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கொண்டதன் காரணமாக இன்று ஒரு முறை உபயோகப்படுத்தும் நெகிழி பயன்பாடு பெருகி நம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் எல்லாமே கேள்விகுறியாகி இருக்கின்றன இந்த நிலை நீடித்தால் நம் அடுத்த தலைமுறை பிள்ளைகள் இந்த மண்ணில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவே நாம் முடிந்தவரை இந்த நெகிழி பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் அதற்கான ஒரு தொடக்கம் தான்  இந்த நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு இந்த மாநாடு திருச்சி தேசிய கல்லூரியில் ஜுலை 14 2019 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்புகள்,  தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர் அவற்றில் புதிய பயணம் , சேலம் இளைஞர்கள் குழு , பணை காக்கும் நண்பர்கள் திருப்பூர் , நெகிழி இல்லா திருப்பூர் , கிரா

"பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 5 மரக்கன்றுகள் இலவசம்" - இளையதலைமுறையின் அசத்தல் அறிவிப்பு!

கரூரில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக 5 மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் விண்ணப்பம் முதுநிலை வரிசையின் படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும் என்று சமீபத்தில் கரூர் மண்டல துணை வட்டாட்சியர் திரு மோகன்ராஜ் அவர்கள் அறிவித்திருந்தார் அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கரூரை பசுமையாய் மாற்றும் பொருட்டு "பசுமை கரூர்" என்ற திட்டத்தினை செயல்படுத்தி வரும் இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பானது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பசுமை கரூர் திட்டத்தின் மூலம் 5 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. தொடர்புக்கு இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு கரூர் 9444738877 9787038867

5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா! - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

கரூரில் மண்டல துணை வட்டாட்சியர் ஒருவர், தனது இருக்கைக்குப் பின்னே, 'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது விலை பேசாதீர் '  என்று எழுதி வைத்துள்ளது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது. `எந்தச் சூழலிலும் லஞ்சத்தை விரும்பமாட்டேன்' என்று நேர்மை மாறாமல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஓர் அரசு அலுவலர்தான், மோகன்ராஜ். கரூர் மண்டல துணை தாசில்தாராக இருக்கும் இவர், தனது அறை முழுக்க, `என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர். கையூட்டு கொடுப்பதும், கொள்வதும் குற்றமாகும். மண்டல துணை வட்டாட்சியர், கரூர்' என்று எழுதிவைத்து அசத்துகிறார். அதோடு, `பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக '5' மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்' என்றும் எழுதி வைத்து அசரடிக்கிறார். நான் பணிஓய்வு அடையும்வரை மரக்கன்று வளர்க்க நான் செய்யும் முயற்சியையும், நான் செய்யும் பணியில் கட்டிக்காக்கும் நேர்மையையும் விடாமல் தொடருவேன். இதேபோல்

பசுமை கரூர் குழுவினருடன் மரக்கன்று வைத்து தமது திருமண நாளை கொண்டாடிய தம்பதியர்

பசுமை கரூர் 13 வது வார களப்பணி எப்பொழுதும் போல தேநீருடன் தொடங்கியது நண்பர்கள் இலையதலைமுறை மாயப்பெருமாள் , பாலசுந்தர் , சேதுராமன் , பூபாலன் , ஜெய்குமார் , அருள்குமார் , மணிராஜ் , சதிஸ் , கார்த்தி , ஜெகன் , ராஜலிங்கம் ஐயா ஆகியோர் கலந்துகொண்டனர் முன்பு நட்ட மரப் பிள்ளைகளில் மாண்டு போனவை இன்று மாற்றி வைக்கப்பட்டன மேலும் சில இடங்களில் கூண்டுகள் சேதம் அடைந்து இருந்தது அதை சரி செய்தோம் அதனை தொடர்ந்து இன்று 5 மரப் பிள்ளைகள் நட்டு களப்பணியை நிறைவு செய்தோம் தோழர் தேவராஜன் - காந்திமதி தம்பதியரின் திருமண நாளான இன்று அவர்கள் கையால் புங்கன் மரப் பிள்ளை ஒன்றை அவர் வீட்டின் வாசலில் நட்டு மகிழ்ந்தோம் இன்று புங்கன் - 3 பாதாம் - 1 மகிழம் - 1 என 5 புதிய மரப் பிள்ளைகள் உடன் முன்பு நட்டு பட்டு போன மரப்பிள்ளைகளுக்கு பதிலாக 2 மகிழம்,1 செண்பக மரப்பிள்ளை நட்டு களப்பணி நிறைவு செய்தோம். நண்பர்கள் 11 பேர் நிறைவாக கலந்து கொண்டனர் அடுத்த வாரம் குறைந்தது 20 மரப் பிள்ளைகளை பூமித்தாயின் மடியில் விதைத்து விட வேண்டும் நன்றிகள் கோடி நண்பர்களே தங்கள் வீட்டில் மரம் நட்டு வளர்க்க விருப்பமா? தகுந்

சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் காணாமல் போகும் அபாயம்

மற்ற நகரங்களைவிட சென்னையில் சிறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் மழைப்பொழிவு இருந்தபோதிலும் 3 ஆறுகள் , 4 நீர் நிலைகள் , 5 ஈர நிலங்கள் , 6 வனப்பகுதிகள் ஆகியவை தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால் மழைநீரை சேமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 40% மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது. #Savewater #Savetree

வித்தியாசமான வீடு

வீட்டிற்கு அருகில் மரம் நட்டால் வீட்டுக்குள் வேர் வரும் , இலை விழும் என்பவர்களுக்கு 👇👇👇❤❤❤ #Savetree