உலகில் எங்கு அநீதி நேர்ந்தாலும் முதலில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பது தமிழினமாக தான் இருக்கும் அந்த வகையில் இன்று உலகிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு நடந்து வருகிறது அதுதான் அமேசான் மழைக்காடுகள் அழிப்பு..
பூமியில் உற்பத்தியாகும் மொத்த ஆக்ஸிஜன் அளவில் 20 விழுக்காடு அளவு அமேசான் காடுகளில் இருந்து தான் உற்பத்தி ஆகிறது எனவே தான் அதனை உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது
கடந்த மூன்று வார காலமாக இந்த நுரையீரல் தீ பற்றி எறிந்து கொண்டு உள்ளது.. பல அரியவகை உயிரினங்கள் , தாவரங்கள் எல்லாம் அழிந்து கொண்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9500 காட்டு தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 80 விழுக்காடு அளவு அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜுலை மாதம் மட்டும் சுமார் 1345 ச.கி.மீ அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது , இதன் அளவை ஒப்பிட்டு பார்த்தால் டோக்கியோ நகரை விட இரண்டு மடங்கு பெரியது.
இதன் ஆபத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் உடனடியாக தீயை அனைக்க வேண்டும் என்றும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்
அவர்களுக்கு கைகோர்க்கும் விதமாகவும் உலக நாடுகளை வலியுறுத்தும் விதமாகவும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கும் அமைப்புகள் கையில் பதாகைகளை ஏந்தி அமேசான் காடுகளை காக்க வலியுறுத்தின.
அவற்றுள் சில, பனை காக்கும் நண்பர்கள் திருப்பூர் , கிராமிய மக்கள் இயக்கம் , பசுமை கரூர் , திரு பசுமை எட்வின் நீடாமங்கலம்
ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும் ஆனால், அமேசான் காடு அழிந்தால் அது உலக அழிவையே துரிதப்படுத்திவிடும்.. ஏனென்றால் , அது வெறும் மழைக்காடு மட்டுமல்ல.. அதுதான் உலகின் நுரையீரல்
நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்கு காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும்.
காடுகளை பாதுகாப்போம்! மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!
நன்றி 🙏
கருத்துகள்
கருத்துரையிடுக