முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பற்றி எறியும் உலகின் நுரையீரல்.. பாதுகாக்க வலியுறுத்தும் தமிழர்கள்

Thalattummazhai ,

உலகில் எங்கு அநீதி நேர்ந்தாலும் முதலில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பது தமிழினமாக தான் இருக்கும் அந்த வகையில் இன்று உலகிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு நடந்து வருகிறது அதுதான் அமேசான் மழைக்காடுகள் அழிப்பு..

பூமியில் உற்பத்தியாகும் மொத்த ஆக்ஸிஜன் அளவில் 20 விழுக்காடு அளவு அமேசான் காடுகளில் இருந்து தான் உற்பத்தி ஆகிறது எனவே தான் அதனை உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது

Thalattummazhai , amazon forest fire

கடந்த மூன்று வார காலமாக இந்த நுரையீரல் தீ பற்றி எறிந்து கொண்டு உள்ளது.. பல அரியவகை உயிரினங்கள் , தாவரங்கள் எல்லாம் அழிந்து கொண்டுள்ளது.
Thalattummazhai ,

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9500 காட்டு தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 80 விழுக்காடு அளவு அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜுலை மாதம் மட்டும் சுமார் 1345 ச.கி.மீ அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது , இதன் அளவை ஒப்பிட்டு பார்த்தால் டோக்கியோ நகரை விட இரண்டு மடங்கு பெரியது.

இதன் ஆபத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் உடனடியாக தீயை அனைக்க வேண்டும் என்றும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்

அவர்களுக்கு கைகோர்க்கும் விதமாகவும் உலக நாடுகளை வலியுறுத்தும் விதமாகவும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கும் அமைப்புகள் கையில் பதாகைகளை ஏந்தி அமேசான் காடுகளை காக்க வலியுறுத்தின.


Thalattumazhai , tirupur

Thalattummazhai ,

Thalattummazhai , Pasumai karur

Thalattummazhai , Pasumai edwin

அவற்றுள் சில, பனை காக்கும் நண்பர்கள் திருப்பூர் , கிராமிய மக்கள் இயக்கம் , பசுமை கரூர் , திரு பசுமை எட்வின் நீடாமங்கலம்

ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும் ஆனால், அமேசான் காடு அழிந்தால் அது உலக அழிவையே துரிதப்படுத்திவிடும்.. ஏனென்றால் , அது வெறும் மழைக்காடு மட்டுமல்ல.. அதுதான் உலகின் நுரையீரல்

Thalattummazhai

நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்கு காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும்.

thalattumazhai ,

காடுகளை பாதுகாப்போம்! மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!

நன்றி 🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

20 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கரூர் ஆத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறை கழிவுநீர் | துர்நாற்றம் வீசும் அவலம்

    உலகில் கிடைக்கும் மிகவும் சுவையான குடிநீரில் ஒன்று தான் சிறுவாணி நீர் , அப்படிப்பட்ட சுவையான நீர் கரூர் மாவட்டம் வரைக்கும் வந்தாலும் நாம் அந்த சுவையை சுவைக்க முடியாது. காரணம் என்ன ? பார்ப்போம்   மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் இணைந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது , இந்த ஆற்றின் பெயர் பெரியாறு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஆற்றுடன் வெள்ளியங்கிரி மலையில் இருந்து உருவாகும் மத்திமர கண்டி ஓடையும் பின்பு சின்னாறு , தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் ஒன்று சேர்ந்தவுடன் இவை நொய்யல் என பெயர் பெருகிறது.   பின்பு கோவை , திருப்பூர் , காங்கேயம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.   ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும் , விவசாயம் வளமாக அமைய காரணமாகவும் இருந்த நொய்யல் ஆறு தற்போது விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் , நிலத்தடி நீர்மட்டத்தை கெடுத்தும் வருகிறது அதற்கு முக்கிய காரணம் திருப்பூர் பகுதியில் இருந்து நேரடியாக ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.   இந்த ந...

தேனி மாவட்டத்தில் நடந்து வரும் ஆணி பிடுங்கும் திருவிழா

15 கும் மேற்பட்ட கிராமத்தில் கடந்த கிராம சபை கூட்டத்தின் போது மரத்தில் ஆணி அடிக்க கூடாது என தீர்மானம் போடப்பட்ட நிலையில் ஏற்கனவே அடித்த ஆணிகளை தற்போது பிடுங்கி வருகின்றனர். ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் கடந்த ஒரு மாத காலமாக சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்கி வருகின்றனர்.

பேளுக்குறிச்சி இராவணன் குழுவினரின் சிலம்பாட்டம்

தமிழர்களின் சிறந்த தற்காப்பு கலையும் வீர விளையாட்டுமான சிலம்பாட்டமானது நாமக்கல் பேளுக்குறிச்சியை சேர்ந்த இராவணன் சிலம்ப குழுவினரால் புதியதலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் குழுவினரின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பசுமை சார்ந்து இயங்கும் குழுக்கள் பங்கேற்ற பொள்ளாச்சி பசுமை பொங்கல் விழாவில் நடைபெற்றது. நன்றி : புதியதலைமுறை தொலைக்காட்சி - நம்மால் முடியும் குழு , டார்கெட் ஜீரோ