பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த கிராமிய கலைஞர்களின் வள்ளி கும்மியாட்டம் நிகழ்வானது புதியதலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழுவினரின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பசுமை சார்ந்த குழுக்கள் பங்கேற்ற பொள்ளாச்சி பசுமை பொங்கல் விழாவில் அரங்கேறியது..
பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த திரு பாலசுப்பிரமணியன் அவர்களுடைய குழுவினர் இவ்வாட்டத்தை நிகழ்த்தி காட்டினர்..
தமிழக பாரம்பரிய ஆட்டங்களுள் ஒன்றான இவ்வாட்டம் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது எனவே இவற்றை காக்கும் முயற்சியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நாமும் நம் பாரம்பரிய கலைகளை காக்கும் விதமாக திருவிழா போன்ற அனைத்து நிகழ்வுகளின்போதும் இது போன்ற கலைகள் நடைபெற முயற்சி செய்வோம்.
நன்றி : புதியதலைமுறை தொலைக்காட்சி - நம்மால் முடியும் குழு
கருத்துகள்
கருத்துரையிடுக