முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 5 மரக்கன்றுகள் இலவசம்" - இளையதலைமுறையின் அசத்தல் அறிவிப்பு!

கரூரில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக 5 மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் விண்ணப்பம் முதுநிலை வரிசையின் படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும் என்று சமீபத்தில் கரூர் மண்டல துணை வட்டாட்சியர் திரு மோகன்ராஜ் அவர்கள் அறிவித்திருந்தார்


அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கரூரை பசுமையாய் மாற்றும் பொருட்டு "பசுமை கரூர்" என்ற திட்டத்தினை செயல்படுத்தி வரும் இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பானது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பசுமை கரூர் திட்டத்தின் மூலம் 5 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

தொடர்புக்கு
இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு கரூர்
9444738877
9787038867

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா! - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்

கரூரில் மண்டல துணை வட்டாட்சியர் ஒருவர், தனது இருக்கைக்குப் பின்னே, 'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது விலை பேசாதீர் '  என்று எழுதி வைத்துள்ளது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது. `எந்தச் சூழலிலும் லஞ்சத்தை விரும்பமாட்டேன்' என்று நேர்மை மாறாமல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஓர் அரசு அலுவலர்தான், மோகன்ராஜ். கரூர் மண்டல துணை தாசில்தாராக இருக்கும் இவர், தனது அறை முழுக்க, `என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர். கையூட்டு கொடுப்பதும், கொள்வதும் குற்றமாகும். மண்டல துணை வட்டாட்சியர், கரூர்' என்று எழுதிவைத்து அசத்துகிறார். அதோடு, `பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக '5' மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்' என்றும் எழுதி வைத்து அசரடிக்கிறார். நான் பணிஓய்வு அடையும்வரை மரக்கன்று வளர்க்க நான் செய்யும் முயற்சியையும், நான் செய்யும் பணியில் கட்டிக்காக்கும் நேர்மையையும் விடாமல் தொடருவேன். இதேபோல்...

வித்தியாசமான வீடு

வீட்டிற்கு அருகில் மரம் நட்டால் வீட்டுக்குள் வேர் வரும் , இலை விழும் என்பவர்களுக்கு 👇👇👇❤❤❤ #Savetree

பேளுக்குறிச்சி இராவணன் குழுவினரின் சிலம்பாட்டம்

தமிழர்களின் சிறந்த தற்காப்பு கலையும் வீர விளையாட்டுமான சிலம்பாட்டமானது நாமக்கல் பேளுக்குறிச்சியை சேர்ந்த இராவணன் சிலம்ப குழுவினரால் புதியதலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் குழுவினரின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பசுமை சார்ந்து இயங்கும் குழுக்கள் பங்கேற்ற பொள்ளாச்சி பசுமை பொங்கல் விழாவில் நடைபெற்றது. நன்றி : புதியதலைமுறை தொலைக்காட்சி - நம்மால் முடியும் குழு , டார்கெட் ஜீரோ